கர்ப்பமாக இருக்கிறோமா? சந்தேகத்தில் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதியின் நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சரவணனின் பிரச்சனை பற்றி அவரது அப்பா பேச, சந்தியாவிற்கு இந்த வாழ்க்கையில் விருப்பம் இல்லை என பிடிவாதமாக இருக்கிறார். அர்ச்சனாவிற்கு வாந்தி வர அவர் கர்ப்பமாக இருக்கிறோமா என சோதித்து பார்க்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று ராஜா ராணி 2 சீரியலில், பார்வதிக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது. சிவகாமி சந்தோசமாக இல்லாததை நினைத்து பார்வதி கவலைப்படுகிறார். அதன் பின்னர் லட்டு எடுத்து இருவரும் ஊட்டிக் கொண்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். அர்ச்சனாவிற்கு கல்யாண ஏற்பாடுகள் புடிக்காமல் இருக்கிறார். அப்போது சரவணனும், பார்வதியும் சேர்ந்து தான் திட்டம் போட்டு இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்கின்றனர் என்று அர்ச்சனா சொல்கிறார்.
அவன் பார்வதிக்கு அண்ணன் கல்யாண ஏற்பாடுகள் செய்தால் என்ன என்று கேட்கிறார். நீங்களும் அண்ணா தான ஆன அவங்க பேசியத்தை உங்களிடம் சொல்லவில்லை என்று சொல்கிறார். இந்த கல்யாணத்தை என்னால் முடிந்தவரை தடுத்து நிறுத்த தான் போகிறேன். அதன் பின்னரும் இந்த கல்யாணம் நடந்தால், உங்க தங்கச்சிக்கு காசு எதுவும் கொடுக்க கூடாது என அர்ச்சனா சொல்கிறார். என் தங்கச்சி கல்யாணத்திற்கு எப்படி காசு தராமல் இருக்க முடியும் என செந்தில் கேட்கிறார். இந்த விசயத்துல ரொம்ப ஓவரா போற என்று சொல்ல ஆமாம், நான் என் தங்கச்சிக்கு பார்த்த மாப்பிளையை நீங்க கொத்திக்கொண்டு போவீங்க, நான் சும்மா இருப்பேனா என்று கேட்கிறார்.
10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!
பின்னர் சரவணனும், அவரது அப்பாவும் கல்யாண ஏற்பாடுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். பாட்டியிடம் சொல்லி விட்டீர்களா என்று கேட்க, சொல்லியாச்சு கொஞ்சம் கோவப்பட்டார் அப்பறம் கல்யாணத்திற்கு வரேன் என்று சொல்லி விட்டார் என சொல்கிறார். நிச்சய மோதிரம் வாங்க செல்ல சரவணன் அப்பா, அம்மாவை போக சொல்கிறார். பின்னர் சரவணன் பிரச்சனை பற்றி கேட்க, அவருக்கு இங்கிருந்து போனால் தான் சந்தோசம் அதான் நான் அவரிடம் இருந்து விலகி செல்கிறேன் என்று சொல்கிறார்.
உன் மேல எவ்வளவு பாசத்துடன் இருக்கிறார். ஆனால் நீ அவளிடம் மனம் விட்டு பேசாமல் நீயா எதுவும் நினைக்காதே என்று சொல்கிறார். அவர் அப்பா எவ்வளவோ சொல்கிறார். ஆனால் சரவணன் பிடிவாதமாக இருக்கிறார். அர்ச்சனா பயங்கர கோவத்தில் இருக்க அவரை சமாதானம் செய்கிறார். அப்போது அர்ச்சனாவுக்கு வாந்தி வருகிறது. அதை பார்த்து செந்தில் பயப்பட அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்கிறார்.
பின்னர் சந்தியா வேலை செய்து கொண்டிருக்கும் போது சரவணனை பற்றி கவலைப்படுகிறார். அர்ச்சனா தான் மாசமாக இருக்கிறோமா என சந்தேகத்தில் இருக்க டெஸ்ட் எடுத்து பார்க்கிறார். ஆனால் அதற்குள் மயில் கூட்டி பெருக்கி அந்த கார்டை குப்பையில் போட எடுத்து செல்கிறார். உடனே அர்ச்சனா அவரை சமாளித்து அந்த கார்டை வாங்கி பார்க்கிறார். அதில் ஒரு கோடு தான் உள்ளது. நல்ல வேளை என அர்ச்சனா நிம்மதி அடைகிறார். கல்யாணத்தை நிறுத்திய பின்னர் தான் குழந்தை பற்றி யோசிக்க வேண்டும் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.