பார்வதிக்கு தைரியம் சொல்லும் சந்தியா, வீட்டு பெண்கள் தனியாக படுக்க சொல்லும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியாவும் சரவணனும் பார்வதியை காப்பாற்றியதை நினைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் இருக்கும் அனைவரும் மருதாணி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ராஜா ராணி 2:
இன்று ராஜா ராணி 2 சீரியலில், சந்தியா பார்வதியை காப்பாற்றியதை சொல்லி சரவணன் நன்றி தெரிவிக்கிறார். உங்களுக்கு நல்ல மனசு என்று பாராட்ட இந்த ஊர்ல இனிப்பு கடை வைத்திருக்கும் ஒருவருக்கும் நல்ல மனசு இருக்கு என்று சந்தியா சொல்லி சிரிக்கிறார். பின்னர் சரவணனின் காயத்திற்கு சந்தியா மருந்து போடுகிறார்.
பின்னர் சிவகாமி, அர்ச்சனா, பார்வதி, சந்தியா சேர்ந்து மருதாணி வைத்துக் கொண்டிருக்க சந்தியாவிற்கு மருதாணி வைக்க தெரியவில்லை என சிவகாமி திட்டுகிறார். சரவணனின் தந்தையும் சேர்ந்து மருதாணி வைக்க, சரவணன் வடை வாங்கி வருகிறார். சிவகாமி மருதாணி வைத்துள்ளதால் அவரது கணவர் அவருக்கு ஊட்டி விடுகிறார்.
சிவகாமி வெட்கப்பட அர்ச்சனாவிற்கு அவரது கணவர் ஊட்டிவிடுகிறார். பின்னர் பார்வதிக்கு சந்தியா ஊட்டிவிடுகிறார். அதன் பின்னர் மயிலுக்கு சிவகாமி ஊட்டிவிடுகிறார். கடைசியாக சரவணனை சந்தியாவிற்கு ஊட்டிவிட சொல்கின்றனர். அவர் ஊட்டி விடுகிறார். பார்வதி நடந்ததை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்க சந்தியா அங்கே வருகிறார்.
அன்னைக்கு நடந்தப்ப நீங்கள் வரவில்லை என்றால் என் நிலைமை என்ன ஆகும் என பார்வதி சொல்கிறார். நடந்தது நடந்துவிட்டது இனிமேல் அந்த பையன் செல்லும் இடத்திற்கு நீ போகாதே ஆனால் அவனுக்காக நீ வீட்டுக்குள்ளவே இருந்திடாத என்று புத்திமதி சொல்கிறார். யாரையும் சீக்கிரமாக நம்பாதே, உன்னை நல்ல நண்பனா நினைப்பவன் உன்னை தனியா கூப்பிட்டு போகமாட்டான். நீ முதலில் நன்றாக படி, உனக்கு என்ன படிக்க ஆசை இருக்கோ அதை படி, வாழ்க்கைல படிப்பு மட்டும் தான் கை கொடுக்கும் என்று புத்திமதி சொல்கிறார்.
மருதாணி வைத்திருப்பதால் ஹாலில் ஒன்றாக தூங்க அர்ச்சனா கிளம்புகிறார். உங்க அம்மா கூட நான் படுக்க மாட்டேன் என அர்ச்சனா பிரச்சனை பண்ணுகிறார். இன்று ஒரு நாள் தான் நாளைக்கு நான் படுக்கமாட்டேன் என்று அர்ச்சனா சொல்கிறார். நீங்க சொன்னதை நான் கேட்டேன்ல எனக்கு மூக்குத்தியும் ஆரமும் வாங்கி தாங்க என்று சொல்கிறார். கோவில் திருவிழா காரணமாக வீட்டில் எல்லா பெண்களும் ஒன்றாக படுக்க வேண்டும் என சிவகாமி சொல்ல சரவணனுக்கு சந்தியாவிற்கு இந்த சின்ன பிரிவு அவங்களை சேர்த்து வைக்கும் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.