சரவணனை தன்வசப்படுத்தும் முயற்சியில் சந்தியா, பார்வதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் குடும்பத்தினர்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சரவணனை சமாதானம் செய்ய வேண்டும் என்று பல விதங்களில் முயற்சி செய்கிறார் சந்தியா. அதற்காக சிவகாமி கூறும் சில ஐடியாக்களை பின்பற்றுகிறார். ஆனால் சரவணனுக்கு சந்தியாவின் செய்கைகள் கோபத்தினை வரவழைக்கிறது.
“ராஜா ராணி 2” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியா சரவணனை சமாதானம் செய்ய வேண்டும் என்று தனது காலில் அடிபட்டது போல நடிக்கிறார். முதலில், பதறும் சரவணன் பின் சந்தியா விளையாடுகிறார் என்பதனை உணர்ந்து கோபத்துடன் செல்கிறார். பின், வேறு வழியின்றி சந்தியாவை தூக்கி கொண்டு பெட்டில் சேர்கிறார். சந்தியாவிடம் இனி இது போல நடந்து கொள்ள கூடாது என்றும் கூறி விடுகிறார். இதனால் சந்தியா நொந்து போகிறார்.
நடிகை வனிதா விஜயகுமாருக்கு, பவர்ஸ்டாருடன் திருமணம் – இணையத்தில் வைரல்!
இன்னும் சந்தியா மற்றும் சரவணன் இருவரும் சேரவில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் சிவகாமி, மயிலிடம் கூறுவது போல சந்தியாவிற்கு கேட்கும்படி, தனக்கும் தனது கணவருக்கும் சண்டை வந்தால், தான் என்னவெல்லாம் செய்வார் என்பது பற்றி கூறுகிறார். கணவனின் மனநிலை அறிந்து அவருக்கு பிடித்ததெல்லாம் தான் செய்வேன் என்றும், அவருக்கு பல உதவிகளை செய்வேன் என்றும் கூறுகிறார். இதனை கேட்கும் சந்தியா தானும் அது போலவே செய்தால், சரவணன் மனம் மாறுவர் என்று நினைத்து அதனை செயல்படுத்துகிறார்.
TN Job “FB
Group” Join Now
இதனால் சரவணன் உச்சகட்ட டென்ஷன் அடைகிறார். தங்களது மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதனை தான் செய்ய வேண்டும் என்றும், மற்றவர்கள் பேச்சினை கேட்க கூடாது என்றும் கூறி விடுகிறார். இதனால் சந்தியா அமைதியாக செல்கிறார். பின், சிவகாமி மற்றும் ரவி, பார்வதிக்கு பாட்டி ஒரு மாப்பிள்ளை பார்த்து இருப்பதாகவும், அந்த வரன் குறித்து விசாரித்து வந்து விடலாம் என்று சரவணனிடம் கூறுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.