நடிகை வனிதா விஜயகுமாருக்கு, பவர்ஸ்டாருடன் திருமணம் – இணையத்தில் வைரல்!
தமிழ் திரையுலகில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமண கோலத்தில் நிற்கும் ஒரு பரபரப்பான புகைப்படத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார். இது நிஜத்தில் நடந்த திருமணமா என்று பலர் குழப்பத்தில் உள்ளனர்.
வனிதா திருமணம்
கடந்த 80களில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக, பல குணசித்திர வேடங்களில் நடித்து இன்றளவும் புகழுடன் இருந்து வருபவர் விஜயகுமார். இவரது மகளான நடிகை நடிகை வனிதா விஜயகுமார் ‘சந்திரலேகா’ என்ற படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே நடிகர் விஜயுடன் ஜோடி போட்ட வனிதா பின் நாட்களில் பல திரையுலக கதாநாயகர்களுடன் டூயட் பாடியுள்ளார். இதற்கிடையில் சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வனிதா சில ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்தார்.
பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கு முக்கிய அறிவிப்பு – AICTE எச்சரிக்கை!
இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் தலை காட்ட துவங்கிய இவர், தெலுங்கானாவை சேர்ந்த தொழிலதிபரை இரண்டாவதாக மணமுடித்தார். இந்த திருமணமும் தோல்வியில் முடிந்தது. இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே மெல்ல சின்னத்திரையின் பக்கம் திரும்பிய அவர், விஜய் தொலைக்காட்சியின் சிறப்பு மிக்க ‘பிக்பாஸ்’ , குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தனது அதிகாரமான பேச்சால் மக்களிடையே மீண்டுமாக பரிச்சயமானார்.
இந்நிகழ்ச்சியின் போது பல எதிர்மறையான கருத்துக்களை பெற்று வந்த வனிதா கடந்த ஆண்டில் பீட்டர் பால் என்பவரை 3 ஆவதாக கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்ய, திரையுலகமும், வலைதளங்களும் சேர்ந்து வனிதாவை வசைபாடியது. இந்த திருமணமும் சில பல காரணங்களால் விரைவிலேயே முடிவுக்கு வந்தது. இவற்றை கண்டுகொள்ளாத வனிதா தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் சமயத்தில், 4 ஆவதாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக வலைதளங்களில் பல செய்திகள் அவ்வப்போது கிளம்பியது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் நடிகை வனிதா விஜயகுமார் – நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் உண்மையா அல்லது படத்திற்காக எடுக்கப்பட்டதா என்ற விளக்கம் எதுவும் கொடுக்கப்படாத நிலையில், பலரும் சந்தேகத்தில் உள்ளனர். இருப்பினும் சில நாட்களாக வனிதாவை மறந்து வந்த இணையதளம், மீண்டுமாக அவரது பழைய கதைகளை கிளறி, வலைதளங்களில் பகிர்ந்து வர இந்த புகைப்படம் மீண்டும் வைரலாகி வருகிறது.