தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை – வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை:
தமிழகத்தில் கோடை காலம் காலம் முடிவடைந்ததையடுத்து தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தற்போது தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு இதே காலநிலை நீடிக்கும் என்றும் வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Indian வங்கியின் சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் – முழு விவரம் இதோ!
தற்போது வெளியிட்டுள்ள தகவலில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, தென்காசி திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, வேலூர், கோவை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், திண்டுக்கல் வேலூர், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ராணிப்பேட்டை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.