இரவு ஊரடங்கு நேரம் நீட்டிப்பு, தியேட்டர்கள் மூடல் – மாநில அரசு உத்தரவு!!
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி, இரவு நேர ஊரடங்கிற்கான நேரத்தினை இரவு 8 மணிமுதல் காலை 5 மணி வரை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 30ம் தேதி வரை சினின் தியேட்டர்களை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
COVID-19 பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ள நிலையில், பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு இன்று மாநிலத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீட்டித்துள்ளது. மேலும் அனைத்து சமூக, அரசியல், மத மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள அனைத்து மால்கள், கடைகள், சந்தைகள், பார்கள், சினிமா தியேட்டர்கள், ஜிம்கள், ஸ்பாக்கள், பயிற்சி மையங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் ஏப்ரல் 30 வரை மூடப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் திருமணம், இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்களால் மேற்கொள்ளப்படும் ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டணங்கள் முறையே ரூ.450 மற்றும் ரூ.300 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மாநில சுகாதாரத் துறையின்படி, பஞ்சாபில் மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டமாக மொஹாலி உள்ளது.
இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!
இதற்கிடையில், மத்திய அரசு கடந்த வாரம் பஞ்சாப் அரசாங்கத்திற்கு எழுதி இருந்த கடிதத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாநிலத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. ஏற்கனவே தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.