புதுக்கோட்டை சிறைச்சாலை பள்ளியில் வேலை 2020
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை பள்ளியில் Packer Clerk பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்தில் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடிய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் அவகாசம் முடிவடையும் முன்னர் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு பட்டதாரிகளை அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | Pudukkotai Prison School |
பணியின் பெயர் | Packer Clerk |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 30.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
புதுக்கோட்டை சிறைச்சாலை பள்ளியில் Packer Clerk பணிகளுக்கு 01 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 15,900/- முதல் அதிகபட்சம் ரூ. 50,400 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Interview செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சிறைக் கண்காணிப்பாளர், பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்டச்சிறை, புதுக்கோட்டை – 622001 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Download Notification 2020 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்