பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் இனி இங்கேயும் அமல் – மத்திய அமைச்சர் உறுதி!

0
பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் இனி இங்கேயும் அமல் - மத்திய அமைச்சர் உறுதி!
பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் இனி இங்கேயும் அமல் - மத்திய அமைச்சர் உறுதி!
பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் இனி இங்கேயும் அமல் – மத்திய அமைச்சர் உறுதி!

தமிழகத்தை தொடர்ந்து தற்போது புதுவையிலும் சிறப்பு பிங்க் நிற பேருந்து திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக புதுச்சேரி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பேருந்து திட்டம்:

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் கடந்த 2021ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக பெண்கள் அரசு நகர பேருந்துகளில் இலவச பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேருந்துகளை மக்கள் அடையாளம் காணும் வகையில் முகப்பு பக்கத்தில் மட்டும் பிங்க் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் இன்றைக்கு கோடிக்கணக்கிலான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இத்தகைய இலவச பயண திட்டம் மற்ற மாநிலங்களுக்கும் சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பெண்களுக்கான இலவச பிங்க் நிற பேருந்து திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

ரூ.2,24,200/- சம்பளத்தில் மத்திய அரசு துறையில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இது குறித்து பேசிய புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா புதுவையில் மகளிருக்கான பிங்க் நிற பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். மேலும் விரைவில் பிங்க் நிற பேருந்தினை அறிமுகம் செய்வதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்ட அறிக்கைக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டு அனுமதி கோரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!