குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.200 பொங்கல் பரிசு – புதுச்சேரி அரசு ஒப்புதல்!!
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.200 பொங்கல் பரிசாக வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் இது நேரடியாக அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் வழக்கமாக ரூ.1000 ஆக வழங்கப்படும் பொங்கல் பரிசு, இம்முறை கொரோனா பரவல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ரொக்கத்தை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் ஜனவரி 4ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான டோக்கன் விநியோகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜேஇஇ தேர்விற்கு இலவச ஆன்லைன் பயிற்சி – 6000 மாணவர்கள் பதிவு!!
கொரோனா பரவல் அச்சத்தால் ரேஷன் கடைகளில் பொதுமக்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது புதுச்சேரியிலும் பொங்கல் பரிசு வழங்க முதல்வர் நாராயணசாமி திட்டமிட்டு உள்ளார். இதற்காக வரைவறிக்கை தயார் செய்யப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
2,200 ஆயுதப்படை காவலர்கள் தேர்தல் பணிக்கு மாற்றம் – கமிஷனர் அறிவிப்பு!!
வழக்கமாக ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் பொங்கல் பொருட்கள் பரிசாக வழங்கப்படும் நிலையில், இம்முறை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.200 பொங்கல் பரிசாக வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் ரூ.200 ரொக்கமாக இல்லாமல், தகுதியான பயனாளிகளின் வங்கிக்கணக்கில் அரசு சார்பில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்