புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி – ஆளுநர் பதவிப்பிரமாணம்!
பதவியேற்பு விழா :
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் என்.ஆர்.ரங்கசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவர் கடந்த 3ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது அவர் பாஜக எம்எல்ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.
அதன்படி புதுச்சேரி முதல்வராக என்.ஆர் ரங்கசாமி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் பதவியேற்றுக் கொண்டார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர் புதுச்சேரியின் 20வது முதல்வர் ஆவார். இவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2 முறை முதலமைச்சராகவும், 2011 ல் என்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஒரு முறை முதல்வராகவும் பதவி வகித்திருக்கிறார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் முகப்பு பக்கம் மாற்றம்!!
தற்போது 4வது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனால் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வருகிறது. மக்களாட்சி மீண்டும் புதுச்சேரியில் அமைகிறது. புதிய முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்