புதிய கல்வியாண்டு முதல் கட்டாயக்கல்வி சட்டம் – பெற்றோர்கள் கோரிக்கை!!

0
புதிய கல்வியாண்டு முதல் கட்டாயக்கல்வி சட்டம் - பெற்றோர்கள் கோரிக்கை!!
புதிய கல்வியாண்டு முதல் கட்டாயக்கல்வி சட்டம் - பெற்றோர்கள் கோரிக்கை!!
புதிய கல்வியாண்டு முதல் கட்டாயக்கல்வி சட்டம் – பெற்றோர்கள் கோரிக்கை!!

புதுச்சேரியில் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தை இந்த ஆண்டாவது அமல்படுத்த வேண்டும் என பெற்றோர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கட்டாயக்கல்வி உரிமை சட்டம்:

புதுவையில் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 10 ஆண்டுகள் ஆன போதிலும் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை என பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த திட்டம் மூலமாக 25 சதவிகித ஏழை எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

இதற்கான கட்டண தொகையை அரசே அந்தந்த பள்ளிகளுக்கு செலுத்தும். இந்த திட்டம் மூலமாக 6 முதல் 14 வயதிற்குட்பட்ட ஏழை மாணவர்கள் பயனடைவார்கள். மேலும் மாணவர்கள் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம்.

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுவை மாநிலத்தில் இன்று வரை சட்டத்தை அமல்படுத்தவில்லை. புதுவையில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளதால் பெற்றோர்கள், மாணவர் சங்கத்தினர், ஏழை மாணவர்கள் நலன் கருதி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை வரும் கல்வியாண்டிலாவது நடைமுறைக்கு கொண்டுவர துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மேலும் இந்த திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!