சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. எனவே துணைநிலை ஆளுநர் தமிழிசை, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் வார நாட்களில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் ஊரடங்கு:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக இதுவரை 48,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் கொரோனா தீவிரம் குறைந்தபாடில்லை. ஏற்கனவே புதுச்சேரியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
துச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் உயர்நிலைக்கூட்டம் நேற்று இரவு ராஜ்நிவாஸில் நடந்தது. அந்த கூட்டத்தின் முடிவில், புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு எனவும் வார நாட்களில் கடைகள் மற்றும் அங்காடிகள், உணவகங்கள் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் – கட்டுப்பாடுகள் தீவிரம்!!
மேலும் உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. மேலும் வார இறுதி முழு ஊரடங்கு வருகிற வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.