தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு – உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

0
தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு – உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

தமிழகத்தில் 13,500 மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது.

மக்கள் நல பணியாளர்கள்:

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது பணியமர்த்தப்பட்ட 13 ,500 மக்கள் நல பணியாளர்களை அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நலப் பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பணியாளர்களின் கருத்தை கேட்டறிந்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது.

நாட்டிலேயே சிறந்து விளங்கும் காவல் துறை உயர் பயிற்சியகம் தமிழகம் தான்… விருதளித்த மத்திய உள்துறை அமைச்சகம்!

இதனை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கை மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மக்கள் நல பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை போலவே மக்கள் நலப் பணியாளர் திட்டமும் செயல்பட அனுமதி அளித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தற்போது திமுக தலைமையிலான அரசு ,மக்கள் நலத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு ரூ.7,500 ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய உச்ச நீதிமன்றம் ஊதிய நிர்ணயம் அரசின் கொள்கை முடிவு என்று தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!