
குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் இன்று(31.12.2024) குளிக்க தடையா..? ” அட, இன்னொரு ஸ்பாட்டிலும் தடையா”..?
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், இயற்கை வளங்கள் அதிகமாக தென்படும் பகுதிகளில் இடைவிடாது மழை பெய்த வண்ணமே உள்ளது. இதனால் அப்பகுதிகளில் அமைந்துள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு இன்று(31.12.2024) குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது, இதனால், அங்குள்ள மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் இன்று(31.12.2024) குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

























