வயநாடு இடைத்தேர்தல் 2024.. வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி!!
கேரளாவில் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நவம்பர் 28ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கடந்த அக்டோபர் 21ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 23) வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்தி, வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேரணியாக சென்ற அவர், வேட்பு மனுவில் கையெழுத்திட்டு தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தார்.


























