ஜனவரி 30 ல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் !!
விருதுநகர் மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கு மட்டுமே என நடைபெற்று வந்த வேலைவாய்ப்பு முகாம்கள் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காகவும் நடத்தப்படுகிறது. இந்த மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமில் கலந்து பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு திறமையான மாற்றுத்திறனாளிகளை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு முகாம் :
வேலைவாய்ப்பு முகாம்களில் பலதரப்பட்ட நிறுவனங்கள் கலந்துக் கொண்டு அவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அதில் பங்கு பெறுவோரை நேர்முகத் தேர்வில் ஈடுபடுத்தும். அதில் தங்களின் தகுதிகள், அனுபவம் மற்றும் திறமைகளின் அடிப்படையில் சிறப்பாக செயல்படுவோருக்கு பணிவாய்ப்புகள் வழங்கப்படும்.
அது போன்ற ஒரு தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆனது தற்போது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த ஏனைய தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :
- காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது.
- தகுதி – மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
- முகாம் நடைபெறும் நாள் – 30.01.2021
- முகாம் நடைபெறும் நேரம் – காலை 10.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை
- முகாம் நடைபெறும் இடம் – சிஎஸ்ஐ மையம், சச்சியபுரம், விருதுநகர் -626124.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்