தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு !
கொரோனவினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் பள்ளிகள் கல்லூரிகள் என எல்லாம் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டான 2020-21-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் 2019-20 நிலுவைத் தொகையினைச் செலுத்த பெற்றோர்களை கட்டாயபடுத்தக் கூடாது என தமிழக அரசு ஏற்கனேவே ஆணை பிறப்பித்தது.
இந்த உத்தரவை அடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என்றும், அதேசமயம் பெற்றோர் விருப்பப்பட்டால் பள்ளி கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என்றும் அரசு தெரிவித்தது.
இதையடுத்து, தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக கல்விக்கட்டணம் தொடர்பான திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பாடங்கள் குறைப்பு – இந்த கல்வியாண்டிற்கு மட்டுமே பொருந்தும்
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உயர் கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் ஆகிய மாதங்களில் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறி உள்ளது. கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் திறப்பு பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.