1 முதல் 5ம் வகுப்பு வரை புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!!
ஹரியானா மாநிலத்தில் புதிய கல்வி ஆண்டில் ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை நடத்த இருப்பதாக கல்வி அமைச்சர் கன்வர் பால் குர்ஜார் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் தொடர்ந்து 11 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹரியானா மாநிலத்தில் 2020 டிசம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு – கல்வித்துறை முடிவு!!
ஆலோசனை:
6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பள்ளிகளுக்கு திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும், புதிய கல்வி ஆண்டில் நேரடி வகுப்புகளை ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆரம்ப பள்ளி மாணவர்கள்:
நடப்பு கல்வி ஆண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆஃப்லைன் வகுப்புகளை நடப்பு ஆண்டில் தொடங்குவது கடினம். இதனால் அடுத்த புதிய கல்வி ஆண்டில் ஆரம்பநிலை வகுப்புகளான 1 முதல் 5 வரை நேரடி வகுப்புகளை தொடங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது என்று கல்வி அமைச்சர் கன்வர் பால் அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்