பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு – கல்வித்துறை முடிவு!!
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக கர்நாடக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்றினால் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் காரணத்தாலும், தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாலும் பள்ளிகள் மீண்டும் திறக்க கர்நாடகா அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் ஜனவரி 1 ம் தேதி முதல் 10 மற்றும் பியூசி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 1ம் தேதி முதல் 9 மற்றும் பியூசி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.
சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வர்களுக்கு பிப்., 28ல் எழுத்துத் தேர்வு!!
வருகை விகிதம்:
பள்ளிகள்ம் மீண்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் வருகை 80-85% ஆக உள்ளது. மீதம் 15-20% மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்றும் குழந்தை தொழிலாளர்களாக மாறிவிட்டார்களா என்பது குறித்தும் குழப்பங்கள் நிலவி வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டில் தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் 75% வருகை பதிவு இருக்க வேண்டும் என்பதை அரசு தளர்த்தியுள்ளது.
கல்வித்துறை அமைச்சர்:
இது தொடர்பாக கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் அவர்கள், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடிய சூழலில் மாணவர்கள் சிலர் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடாத்தியுள்ளேன். மாணவர்களின் கல்வி தொடர் முயற்சி எடுக்கப்படும். குழந்தை தொழிலாளியாக மாறிய குழந்தைகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த கணக்கெடுப்பை அடுத்த ஒரு மாதத்தில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்