
இது முதலீடு செஞ்சா..சும்மா ராஜா மாறி வாழலாம்..!! ” குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் அசத்தல் திட்டம்”…!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பணத்தை சேமிக்கும் பழக்கம் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால், மக்கள், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில், PUBLIC PROVIDENT FUND (PPF) எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதியானது, முதலீட்டாளர்களுக்கு 7.1% வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு வெறும் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சம் 1 வருடத்திற்கு 1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும், இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், உங்களுக்கு தேவைப்பட்டால் முதிர்வு காலத்தை மீண்டும் 5 ஆண்டுகள் வரை நீட்டித்து கொள்ளலாம். மேலும், இந்த அத்திட்டத்தின் முதிர்வு காலத்தில் எப்படி ரூ.10 லட்சத்தை பெறலாம் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
உங்களுக்கு 18 வயது ஆயிடுச்சா..!!அப்போ இதுல முதலீடு செஞ்சா ரூ.17 லட்சம் உங்களுக்குத்தான்..!!
அதாவது, இப்போது நீங்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 100 என்று சேமித்து வைத்தால், மாதத்திற்கு 3000 ரூபாய் கிடைக்கும். அதை இந்த PPF திட்டத்தில் மாதந்தோறும் ரூ.3000 என்ற கணக்கில் முதலீடு செய்து வந்தால், 1 வருடத்தில் 36,000 ரூபாய் நீங்கள் முதலீடு செய்திருப்பீர்கள். அதுவே, முதிர்வு காலத்திற்கு பின் மொத்த முதலீடாக ரூ. 5.40 லட்சம் கிடைக்கும். அதோடு, 15 ஆண்டுகளின் கிடைக்கும் வட்டி வருமானம் ரூ.4,36,370 சேர்த்து , மொத்த தொகையாக ரூ. 9,76,370 உங்களுக்கு கிடைக்கும். மேலும், இதை நீங்கள் மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் பட்சத்தில், உங்களின் முதலீடு இரட்டிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.























