தமிழகத்தில் அக்.28ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் கௌண்டபாளையம் துணைமின் நிலையத்தில் மின் பராமத்து பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரிய அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மின்தடை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பராமத்து பணிகள் குறிப்பிட்ட துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது சாலையோரங்களில் மின்கம்பிகளில் விழும் மற்றும் வாகனங்கள் செல்ல இடையூறாக இருக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வாறு சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகளில் மின்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பின்னர் அவை வேறு இடங்களில் நடப்பட்டும் வருகின்றன. இது போன்ற வேலைகளின் நிமித்தமும் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் மேட்டுபாளையம் சாலையில் மேம்பாலப் பணிகள் மற்றும் சாலை விரிவுபடுத்தும் பணியில் மின் கம்பங்கள் அகற்றும் பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை (அக்.28) வியாழக்கிழமை கௌண்டபாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முழு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து, தொடக்க பள்ளிகள் திறப்பு – மாநில அரசின் புதிய தளர்வுகள்!
அதன்படி பணியாளர்கள் நலன் கருதி நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லட்சுமி நகர், சிவா நகர் ஒரு பகுதி, மேட்டுப்பாளையம் சாலை ராமசாமி திருமண மண்டபம் முதல் சேரன் நகர் பேருந்து நிலையம் வரை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று கௌண்டம்பாளையம் துணை மின் நிலைய அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.