தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – வகுப்பறை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

0
தமிழகம் முழுவதும் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு - பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்!
தமிழகம் முழுவதும் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு - பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – வகுப்பறை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு 1 – 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஓராண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கற்றலில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்தனர்.

முழு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து, தொடக்க பள்ளிகள் திறப்பு – மாநில அரசின் புதிய தளர்வுகள்!

இதனை ஆராய்ந்து நவம்பர் 1ம் தேதி முதல் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகள் திறக்க தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் வருகைக்காக மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து அந்தந்த மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

இதனையடுத்து பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் படி இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர்புறங்களை தொடர்ந்து கிராம புறங்களிலும் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் உள்ள உடைந்த இருக்கைகள், மேஜைகள், கதவு, ஜன்னல் போன்றவைகளை சரி செய்யும் பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!