தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின் நுகர்வு – கோடை வெப்பம் எதிரொலி!

0
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின் நுகர்வு - கோடை வெப்பம் எதிரொலி!
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின் நுகர்வு - கோடை வெப்பம் எதிரொலி!
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின் நுகர்வு – கோடை வெப்பம் எதிரொலி!

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் நுகர்வோருக்கு தேவையும் அதிகமாகி விட்டது. அந்த வகையில் தினசரி மின் நுகர்வு நேற்று முன்தினம் 18 ஆயிரத்து 252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.

மின் நுகர்வு

தமிழகத்தில் சுமார் 2. 67 கோடி பேர் மின் நுகர்வோர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு பொதுவாக மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும். அது கோடைகாலத்தில் 16 ஆயிரம் எனவும், குளிர் காலத்தில் 12 ஆயிரமாக குறையும். ஆனால் இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் மினசார பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. அதன் படி தினமும் மின் தேவை 16 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இதற்கு காரணம் விவசாய பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகள் தான் என தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை – ஏப்.11 ம் தேதி போராட்டம்.. அமைச்சர் பேச்சு வார்த்தை!

மேலும் அந்த பிரிவில் கூடுதலாக 727 மெகாவாட் மின்சாரம் அதிகரித்து இருக்கிறது. மேலும் விவசாயத்திற்கான 18 மணி நேர மின் விநியோகம் மற்றும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் மின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் மின் நுகர்வு நேற்று முன்தினம் 18 ஆயிரத்து 252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. ஏற்கனவே கடந்த மார்ச் 17 ஆம் தேதி 18 ஆயிரத்து 53 மெகாவாட்டாக இருந்த நிலையில் தற்போது அதனை முறியடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேவை எந்த மின்தடையும் இல்லாமல் ஈடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!