சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு – அதிகாரபூர்வ எச்சரிக்கை அறிவிப்பு!!
சென்னை துறைமுகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக போலியான அறிவிப்புகள் மூலம் சிலர் மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அது தொடர்பாக அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதிகாரபூர்வ எச்சரிக்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்ட்ட ஊரடங்கு உத்தரவின் விளைவாக பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. ஊரடங்கு காலத்தில் பலரும் இதனால் வேலையிழந்தனர். அவர்களை குறிவைத்து வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் அதிகரித்து விட்டன. அது தொடர்பான ஒரு எச்சரிக்கை அறிவிப்பை சென்னை துறைமுக நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
பழைய ஓய்வூதிய கொள்கை கோரிக்கை – ஜாக்டோ ஜியோ 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம்!!
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, சென்னை துறைமுகத்தில் சில பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறி தேர்வு செய்வது போல், சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி போலியான பணிஆணை கடிதத்தை அனுப்பி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற போலி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
கல்வி உதவித்தொகை பெற விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் – சிஇஓ உத்தரவு!!
சென்னை துறைமுகத்தில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ முறைப்படி விளம்பரம் www.chennaiport.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்படும். இதனால் போலி அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்