ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ.2500 – இன்று முதல் விநியோகம்!!
தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ. 2500 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்களுடன் கூடிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் திருவாரூரில் அமைச்சர் காமராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பொங்கல் பரிசு விநியோகம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு வழக்கமாக வழங்கப்படும் ரூ.1000 பொங்கல் பரிசை உயர்த்தி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து ரூ.2500 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி டோக்கன் விநியோகம் மற்றும் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இன்று முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? இன்று முதல் கருத்துக்கேட்பு!!
ரூ.2500 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர் திராட்சை , முழு நீள கரும்பு மற்றும் துணிப்பை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிடப்பட்டு உள்ள தேதி மற்றும் நேரத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் வந்து பொருட்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசு கணினி பயிற்றுநர் காலியிடங்களுக்கான கலந்தாய்வு – 36 ஆசிரியர்கள் தேர்வு!!
இத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 2.10 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். மேலும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அரசு வழங்கிய அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்