தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஒரே தவணையில் பொங்கல் பரிசு! அரசு உத்தரவு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் வழங்கப்பட பொங்கல் தொகுப்பை ஒரே தவணையில் வழங்குமாறு அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரே தவணையில் பொங்கல் தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் சில மளிகை பொருட்களும் சேர்த்து ஒரு துணிப்பையுடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பானது 2.15 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.1,088.17 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – டிச.25க்கு முன் அகவிலைப்படி (DA) நிலுவை?
இந்த பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்கள், மாவட்ட வேளாண் துறை இயக்குநர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் கரும்பு போன்ற பொருட்கள் கூட்டுறவு சங்கங்களால் கொள்முதல் செய்து விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை பழுப்பு நிற காகிதத்தில் பொட்டலமிட்டு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
இந்நிலையில் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் நாளை அறிவித்த பிறகு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பொருட்கள் இல்லை என்று திருப்பி அனுப்பக் கூடாது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 1000 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள கடைகளுக்கு 2 பணியாளர்களும், அதற்கு மேல் உள்ள கடைகளில் 3 பணியாளர்களும் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.