மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – டிச.25க்கு முன் அகவிலைப்படி (DA) நிலுவை?
தற்போது வரை வெளிவந்துள்ள தகவல்களின்படி, வருகின்ற டிசம்பர் 25ம் தேதிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
DA நிலுவைத்தொகை
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த நிலுவைத்தொகையை வழங்குவது தொடர்பாக அமைச்சரவை ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை தொடர்பான அறிவிப்பு டிச.25க்கு முன்னதாக வெளியாகும் என தெரிகிறது.
தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
இப்போது பல ஊடக அறிக்கைகளின்படி, அகவிலைப்படி (DA) தொகையை மீட்டெடுக்கும் போது, 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை ஒரு முறையில் கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு டிசம்பர் 25 ஆம் தேதிக்கு முன்னர் மத்திய அமைச்சரவை, அமைச்சரவை செயலாளருடன் இது தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு வாரியத்தின் பயனாளிகள் கவனத்திற்கு – அரசு அறிவிப்பு!
முன்னதாக JCM தேசிய கவுன்சில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் நிதி அமைச்சகம் இடையே DA நிலுவைத் தொகை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அந்த வகையில் மீண்டுமாக மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் நிலுவையில் இருக்கும் DA தொகையை மீட்டெடுப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டு, இது தொடர்பான அறிவிப்பு டிச.25க்கு முன்பாக வெளியாகலாம் என சொல்லப்பட்டு வருகிறது.