தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு வாரியத்தின் பயனாளிகள் கவனத்திற்கு – அரசு அறிவிப்பு!

0
தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு வாரியத்தின் பயனாளிகள் கவனத்திற்கு - அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு வாரியத்தின் பயனாளிகள் கவனத்திற்கு - அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு வாரியத்தின் பயனாளிகள் கவனத்திற்கு – அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் குடிசை பகுதி இல்லாமல் மாற்றுவதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்பாடு வருகிறது. தற்போது அரசு குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

பயனாளிகள் கவனத்திற்கு:

தமிழ்நாட்டில் குடிசை பகுதி இல்லாமல் மாற்றுவதற்கு 1970 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் ஒன்றை அரசு அமைத்தது. இதன் மூலமாக குடிசை வாழ் மக்களுக்கு அரசு சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் பல்லாயிரக்கணக்கான குடிசைவாழ் மக்கள் பயன் அடைந்தனர். தற்பொழுது இத்திட்டம் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் குடிசை வாழ் மக்களின் குடிசை வீடுகளை மாற்றுவது மட்டும் அல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாமினி அப்டேட் அவசியம்! முழு விபரங்கள் இதோ!

மேலும் தமிழ்நாட்டில் 2031 ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லாத மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அத்துடன் அடுத்த 10 ஆண்டுகளில் 9.53 லட்ச ஏழை எளிய மக்களுக்கு வீடுகளை வழங்க உள்ளதாக அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பெறும் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்கு தொகையானது மிக அதிகமானதாக இருந்தது. தற்போது இதனை மாத தவணை முறையில் சுலபமாக செலுத்தும் விதமாக அரசு அரசாணை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி பயனாளிகள் செலுத்தும் பங்களிப்பு தொகையானது ரூ.250 முதல் ரூ.500 வரை செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்? அதிபர் விளக்கம்!

இதையடுத்து 100% முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட / கட்டப்பட உள்ள பகுதிகளுக்கு மாத தவணையாக சென்னை மற்றும் இதர நகரங்களில் ரூ.250 செலுத்த வேண்டும். அடுத்ததாக 60% முதல் 100 சதவீதத்திற்கு உட்பட்ட கட்டி முடிக்கப்பட்ட / கட்டப்பட உள்ள பகுதிகளுக்கு சென்னையில் மாத தவணையாக ரூ.400 மற்றும் இதர நகரங்களில் ரூ.300 செலுத்த வேண்டும். அதையடுத்து 30% முதல் 60 சதவீதத்திற்கு உட்பட்ட கட்டி முடிக்கப்பட்ட / கட்டப்பட உள்ள பகுதிகளுக்கு சென்னையில் மாத தவணையாக தங்கள் பங்களிப்பு தொகையை ரூ.500 மற்றும் இதர நகரங்களில் ரூ.400 என்று செலுத்த வேண்டும். இவ்வாறு 20 ஆண்டுகள் வரை தவணையை தவறாமல் செலுத்தும் பயனாளிகளுக்கு பகுதி வட்டித் தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!