பொங்கல் பரிசுத்தொகுப்பு – ஆட்சியர் தலைமையில் குழு.. புகார் எண் அறிவிப்பு!

0
பொங்கல் பரிசுத்தொகுப்பு - ஆட்சியர் தலைமையில் குழு
தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருட்களை சரியாக விநியோகம் செய்ய மாவட்டம் மற்றும் வட்டாரம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம் மற்றும் முழு கரும்பு அத்துடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பணிகளை வேகப்படுத்தி அனைத்து பொருட்களும் மக்களை சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பரிசு தொகுப்பை கொள்முதல் செய்யவும் உரிய முறையில் வழங்கவும் வட்டாரம் மற்றும் மாவட்டம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வேளாண் துறை இயக்குனர், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடங்கியுள்ளனர். மேலும் இந்த பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க புகார் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!