1 முதல் 12ம் வகுப்புகளுக்கு முழுநேரம் பள்ளிகள் திறப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு முழு நேரம் செயல்பட தொடங்கிய நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வருகை புரிந்தனர்.
பள்ளிகள் திறப்பு:
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்த பின்னர் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதே போல டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பகுதி நேரமாக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெற்று வந்தன.
தமிழக நுகர்வோர் குறைதீர்மன்ற காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உத்தரவு!!
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் இன்று முதல் முழு நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல், மாலை வரை வகுப்புகள் நடைபெறும். அதே போல பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் (சனிக்கிழமை உட்பட) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1 ஆண்டுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதே போல மாணவர்களுக்கு பள்ளிகளில் பால் வழங்கப்படும் என துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்