தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு…!! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு..!!
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் பட்டாசும், புத்தாடைகளுமே நினைவுக்கு வரும். அத்தகைய பட்டாசுகளை காற்று மாசுப்பாடு காரணமாக வெடிக்க பல வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதாவது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “தீபாவளி ( அக் 31 ) அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், காலை 6-7 மணி மற்றும் இரவு 7-8 மணிக்கும் குறைந்த ஒலி மற்றும் அதிக மாசுகளை ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்கவும் ” இவ்வறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.
























