நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியது. மேலும், கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஆந்திரா ஒட்டி கரையை கடந்தது. இந்நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், அது வரும் புதன்கிழமை அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்களை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு செயல்படும் படி அறிவுறுத்தியுள்ளது



























