பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க
முன்னணி பொது துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கி, தமிழகத்தில் கீழ் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தை உறைவிடமாக கொண்ட இந்திய குடிமக்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள/ பிரசுரிக்கப்பட்டுள்ள திருச்சி வட்டாரத்திலுள்ள அதன் கிளைகளுக்கு பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதற்கான தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | PNB |
பணியின் பெயர் | Sweeper |
பணியிடங்கள் | 37 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09-01-2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட வாரியாக மொத்த காலி இடங்கள் :
1. அரியலூர் 2
2. கடலூர் 2
3. தர்மபுரி 2
3, கிருஷ்ணகிரி 1
5. மயிலாடுதுறை 3
6. நாகப்பட்டினம் 3
7. நாமக்கல் 3
8. பெரம்பலூர் 1
9. சேலம்: 4
10. தஞ்சாவூர் 3.
11. திருவாரூர்1
12. திருச்சி 12
மொத்தம் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
01-07-2021- ன் படி வயது வரம்பு தகுதி :
குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 24 அதிகபட்ச வயது வரம்பு தளர்வுகள் சேர்ந்து 45 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்
பஞ்சாப் நேஷனல் வங்கி கல்வி தகுதி :
தகுதியான விண்ணப்பதாரர்கள், அறிவிக்கப்பட்டுள்ள / பிரசுரிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத்தை சார்ந்தவர்களாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
மாவட்ட உறைவிடம் :
தகுதியான விண்ணப்பதாரர்கள், அறிவிக்கப்பட்டுள்ள/ பிரசுரிக்கப்பட்டுள்ள காலி விண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத்தை சார்ந்தவர்களாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
அனைத்து வகைகளிலும் முற்றிலும் நிரப்பப்பட்டு, உரிய முறையில் கையொப்பமிடல் வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களும் இணைத்து 09-01-2022 அன்று அல்லது அதற்கு முன்போ வங்கி அலுவலகத்தை சென்று சேர வேண்டும். இத்தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணபங்கள், முழுமையாக நிரப்பப்படாத, தகுதியற்ற, தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாமல், தனது மாவட்ட வசிப்பிடமின்றி, பிற மாவட்ட வசிப்பிடத்திலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றக்கொள்ளப்படமாட்டாது. பணி ஆட்கள் வங்கியின் வழிகாட்டுதலின் படி தேர்வு செய்யப்படுவர். பணி ஆட்கள் தேர்வில் வங்கியின் முடிவே இறுதியானது. ஒப்புதல் பெற்ற விண்ணப்பதாரரின் பெயர்கள் எங்களது வங்கி / வங்கி கிளை அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரையின் மேல் “பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலா; சேர்க்கைக்கான தேர்வு – 2021-22, மாவட்டம். ..” என தெளிவாக குறிப்பிட்டு, அனுப்புனர் விலாசத்துடன், முதன்மை மேலாளர், மனிதவள மேம்பாட்டு துறை, வட்டார அலுவலகம், “118 ஹவுஸ்”, ‘திருச்சி தஞ்சாவூர் சாலை, கைலாசபுரம், திருச்சி 620 014 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.