மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 3% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!
உத்தரபிரதேச மாநில அரசு சமீபத்தில் தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 31% ஆக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்ட நிலையில், உத்தரகாண்ட் மாநில அரசும் தனது ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
DA உயர்வு:
உத்தரபிரதேச அரசு ஊழியர்களின் டிஏவை 29 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக கடந்த வாரத்தில் உயர்த்தியது. அதன்படி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூலை 2021 முதல் டிஏ அதிகரிக்கப்பட்டுள்ளதை அறிவித்தார். மேலும், முந்தைய நிலுவை தொகைகள் அனைத்தும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிற்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அதிகரித்து அறிவித்ததை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கு நிலுவையில் வைத்திருந்த DA உயர்வை அதிகரித்தது.
இன்று முதல் தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு – அரசு அறிவிப்பு!
இந்த வரிசையில், உத்தரகாண்ட் மாநிலமும் தனது ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) உயர்த்த முடிவு செய்துள்ளது. விரைவில் அங்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. அரசு ஊழியர்களின் DA 3 சதவீதம் அதிகரிக்க உத்தரகாண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதன் மூலம் ஊழியர்களின் டிஏ 31 சதவீதமாக உயரும். இந்த அறிவிப்பினால் உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
2022ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பொது விடுமுறைகள் – முழு பட்டியல் இதோ!
மேலும், உத்தரகாண்ட் அரசு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விக்கான சிறந்த அணுகலுக்காக மொபைல் டேப்லெட்களை விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளது. நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் தகுதியான மாணவர்களின் வங்கி கணக்குகளில் அரசு விரைவில் இதற்கான பணத்தை டெபாசிட் செய்யும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.190 கோடி கூடுதலாக செலவாகும். இதுமட்டுமின்றி 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும் இலவச பாடப்புத்தக திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர் என்று அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.