இன்று முதல் தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு – அரசு அறிவிப்பு!
தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் நோய் தொற்று விகிதம் 0.5 சதவீதத்தை கடந்துள்ள நிலையில் தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் தொற்று வேகம் எடுத்து வருவதால் ஒவ்வொரு மாநிலங்கள் தோறும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் பரவல் தொற்று கணிசமாக உயர்ந்து வருவதையடுத்து இனசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதிப்பதாக டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தடை இன்று (டிசம்பர் 27) முதல் அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பொது விடுமுறைகள் – முழு பட்டியல் இதோ!
இதற்கிடையில் டெல்லியில் இன்று 290 புதிய கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதே நேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் நேர்மறை விகிதம் 0.5 சதவீதத்தை தாண்டினால் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பின் படி இன்னும் 2 நாட்களுக்கு மேல் நேர்மறை விகிதங்கள் 0.5 சதவீதத்திற்கு மேல் இருந்தால், மஞ்சள் எச்சரிக்கை விடப்பட இருக்கிறது.
இந்த மஞ்சள் எச்சரிக்கை அமலுக்கு வந்தால், டெல்லியில் மீண்டுமாக உணவகங்கள் மற்றும் பார்கள் அவற்றின் மொத்த கொள்ளளவில் 50 சதவீதத்தில் செயல்பட கட்டாயப்படுத்தப்படும், அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் கடைகள் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். மேலும் திரையரங்குகள் மற்றும் தியேட்டர்கள் மூடப்படக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது. இதுவரை டெல்லியில் 79 ஓமிக்ரான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி? ஏகப்பட்ட வழிமுறைகள்!
மத்திய சுகாதார அமைச்சகம் கடைசியாக வெளியிட்ட புதுப்பித்தலின்படி, நாடு தழுவிய ஒமிக்ரான் பரவலின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கர்நாடகா, அசாம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன. அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநில அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.