இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!
இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களின் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா நிலவரம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 46% தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் – பிரதமர் மோடி ஆய்வு!!
இந்நிலையில் கொரோனா தொற்றினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்களின் நிலவரம் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் தொற்று பாதிப்பு நிலவரம், தடுப்பு மருந்துகள் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றை ஆய்வு நடத்துகிறார். பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் நிலையைப் பற்றி அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
இந்த கூட்டத்தில் முடிவில், பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுக்கு தேவையான மருத்துக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை கிடைப்பதை உறுதி செய்யும்படி,மருந்துகள் உற்பத்தியை கிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், மற்றும் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர். நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ள நிலையில் பிரதமரின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்