இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் – பிரதமர் மோடி ஆய்வு!!

0
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் - பிரதமர் மோடி ஆய்வு!!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் - பிரதமர் மோடி ஆய்வு!!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் – பிரதமர் மோடி ஆய்வு!!

நாடு முழுவதும் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகளின் தற்போதைய இருப்பு மற்றும் மாநிலங்கள் தோறும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி ஆய்வு

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்திடம் இருந்து, மத்திய அரசு குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து வாங்கி, அதை மாநிலங்கள் தோறும் விநியோகித்து வருகிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

TN Job “FB  Group” Join Now

தவிர நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால், மக்களுக்கு இந்த தடுப்பூசிகளை செலுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இந்தியாவில் வரும் நாட்களில் ரஷ்ய நிறுவனத்தின் ஸ்புட்னிக் V என்ற தடுப்பு மருந்துகளும் கொரோனாவுக்கு எதிராக களமிறக்கப்பட உள்ளன. இந்நிலையில் கடந்த மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி, ஒவ்வொரு மாநிலங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் காலிப்பணியிடங்கள் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!

இந்நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகளின் தற்போதைய இருப்பு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிராக பலனளிக்கும் ரெம்டெசிவிர் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க மருந்து நிறுவனங்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!