இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!!
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தினசரி புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இன்று அனைத்து மாநில ஆளுநர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பிரதமர் ஆலோசனை:
இந்தியாவில் கடந்த வருட மார்ச் மாதத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து பிற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர்.
இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றின் 2வது அலை வேகமெடுத்து வருகிறது. தினசரி 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மஹாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இன்று பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மாநில ஆளுநர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்கள் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துதல், கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தல் மற்றும் நாடு தழுவிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தலாமா? என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு அச்சத்தால் பல மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்