இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அதனால் அங்கு இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதை தொடர்ந்து, இன்று (14-04-2021) முதல் 15 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கம்:
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலங்கள் தோறும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நோய்பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 60 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் இன்று (14-04-2021) இரவு 8 மணி முதல் வரும் 15 நாட்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறும்போது, ‘இந்த நாட்களில் மக்கள் தாமாகவே முன் வந்து பொது முடக்கத்தை கடைபிடிக்க வேண்டும். முழு ஊரடங்கு காலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்!!
இந்த 15 நாட்களில் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் 7 கோடி ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் பொதுமுடக்க காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும், போக்குவரத்து வசதிகள் செயல்படும் என தெரிவித்த அவர், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மக்கள் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து இந்த 15 நாட்களில் அனைத்து அலுவலகங்களும் மூடப்படும் எனவும், பணியாளர்கள் யாவரும் அவர்கள் வீடுகளிலிருந்து பணிகளை கவனிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
தொடர்ந்து மஹாராஷ்டிராவில் பெட்ரோல் பங்குகள், மருத்துவ சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அவசியமில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு அதிக அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை தர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே.