மீண்டும் முழு ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது. எனவே டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கி உள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை தாக்கம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக சில அரசு வட்டாரங்கள் தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து சமூக ஊடகங்களில் அதிகாரபூர்வமற்ற செய்திகள் பரவி வருவதால் மக்கள் மீண்டும் முழு ஊரடங்கு அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பல மாநிலங்களில் இருந்து வேலை தேடி டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு வந்த தொழிலாளர்கள் மீண்டும் ஊரடங்கு அறிவித்தால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்தில் தங்களது சொந்த மாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் – சி.ஐ.ஐ சர்வே முடிவுகள்!!
இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. தற்போது பல மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்க இ-பாஸ் முறை அமலில் உள்ளது. இதனால் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக அவர்கள் நடைபயணமாக சென்றனர். அவ்வாறு நடக்காமல் இருக்க தற்போது முன்னெச்சரிக்கையாக செல்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.