தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் தற்போது வெயிலின் கொடுமை வாட்டி வதைக்கும் இந்த சூழ்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்க்கு தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் வெப்பநிலை:
தமிழகத்தில் பொதுவாக வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து மே மாதத்தின் தொடக்கத்தில் தான் அதிகமாக இருக்கும். நடப்பு ஆண்டில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் கொடுமை அதிகமாவே உள்ளது. மேலும், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் தற்போதே வெயில் 100 டிகிரியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் – சி.ஐ.ஐ சர்வே முடிவுகள்!!
மக்களின் அச்சம்:
கோடையின் தொடக்கத்திலேயே வெயில் அதிகபட்சமாக உள்ளதால் தமிழக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், வெயிலின் தாக்கம் இருந்த போதிலும் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
இடியுடன் கூடிய மழை:
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் இந்த சூழ்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்