தேர்வின்றி அரசு பணி நிரந்தரம் சாத்தியமில்லை – அரசு திட்டவட்டம்!
ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள் தேர்வின்றி பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் என்று மத்திய அமைச்சகம் உறுதியாக அறிவித்துள்ளது.
பணி நிரந்தரம்:
காசு துறைகளில் திடீரென்று காலியிடங்கள் ஏற்படும் போது, தேர்வுகள் நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆனால் தேர்வுகள் நடத்த போதிய அவகாசம் இல்லாத நிலையில், அத்தியாவசிய துறைகளில் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இது போல், தற்காலிகமாக புதுவை மருத்துவத் துறையில் சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி துறைகளில் நியமிக்கப்பட்டவர்கள் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்படுவதாக மத்திய தேர்வாணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
RBI வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. வீடு வாங்க இனி நல்ல நேரம் தான் – முழு விவரம்!
ஆனால், மத்திய தேர்வாணையம் உச்ச நீதிமன்றத்தில் இதற்கு முன்னர் நடந்துள்ள வழக்குகளின் அடிப்படையில் தேர்வுகள் இல்லாமல், நிரந்தர ஊழியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். மேலும், அனைத்து அரசு துறை, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நிரந்தர விதிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய நிர்வாகத்துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.