ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ‘பேரன்பு’ சீரியல் – ப்ரோமோவை பார்த்து உற்சாகமான ரசிகர்கள்!
தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், பல புதிய சீரியல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் பேரன்பு என்ற புதிய தொடர் தொடங்கப்பட உள்ளது.
பேரன்பு தொடர்:
வெள்ளித்திரை படங்களை விட சின்னத்திரை சீரியல்களுக்கு மக்களிடம் அதிக மவுசு உண்டு. அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. மேலும் ஏற்கனவே உள்ள பிரபல தொடர்களில் விறுவிறுப்பை அதிகரிக்க பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் சன் டிவியில் சஞ்சய் நடிக்கும் கயல் என்ற புதிய தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வார TRP யில் கயல் சீரியல் தான் முதலிடத்தில் இருந்தது.
நடிகை சமந்தவுடனான விவாகரத்துக்கு பிறகு காதலில் விழுந்த நாகசைதன்யா? சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டா பதிவு!
அந்த வரிசையில் ஜீ தமிழ் தற்போது “பேரன்பு” என்ற புதிய தொடரை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தங்கை ரோலில் நடித்து வரும் வைஷ்ணவி தான் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக விஜய் வெங்கடேசன் நடிக்கிறார். ஆதரவற்ற பெண்ணான ஹீரோயின் பல இடங்களில் ஆசைபட்டது எதுவும் கிடைக்காமல் இருக்கிறார். அவர் ஆசையாக புடவை ஒன்றை எடுக்க அதையும் பறித்து விடுகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு ‘ராஜா ராணி’ சித்து, ஷ்ரேயா ஜோடி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!
இந்த சீரியலில் வில்லியாக செம்பருத்தி சீரியல் புகழ் லக்ஷ்மி நடிக்கிறார். மேலும் கதாநாயகியின் அம்மாவாக விஜய் டிவி மௌன ராகம் சீரியலில் நடித்த ஷமிதா நடிக்கிறார். மேலும் கதாநாயகியை பிடிக்காமல் ஹீரோ திருமணம் செய்ய, நான் இருக்கிறேன் என அவர் சொல்வது போல கதை காட்டப்பட்டுள்ளது. அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது.