நடிகை சமந்தவுடனான விவாகரத்துக்கு பிறகு காதலில் விழுந்த நாகசைதன்யா? சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டா பதிவு!
சமீபத்தில் நட்சத்திர தம்பதிகளான நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தாவின் விவாகரத்து முடிவுக்கு பிறகு, நாகசைதன்யா முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை பதிவு
தென்னிந்திய திரைப்பட உலகில் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த ஒரு முக்கிய விஷயம் நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தாவின் விவாகரத்து தான். தமிழ் திரைப்பட நடிகையான சமந்தா மற்றும் தெலுங்கு உலகின் கதாநாயகனான நாகசைதன்யாவும் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஒரு சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவர்களது காதல் திருமண வாழ்க்கை எதிர்பாராத விதமாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு ‘ராஜா ராணி’ சித்து, ஷ்ரேயா ஜோடி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!
அந்த வகையில் சமீபத்தில் தங்களது திருமண வாழ்வை முறித்து கொண்ட இவர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் நடிகை சமந்தா சில தமிழ் படங்களில் நடித்து வரும் நிலையில் பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல நடிகர் நாகசைதன்யாவும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலிக்கு பிரசவம் பார்க்கும் வெண்பா – வெளியான படப்பிடிப்பு தள வீடியோ!
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் நாகசைதன்யா தனது விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, க்ரீன் லைட் என்ற ஒரு புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்’ என தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் நடிகர் நாகசைதன்யா மீண்டும் காதலில் விழுந்து விட்டாரோ என்று வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.