பணி நிரந்தரம் வழங்கக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் – முதல்வர் வீடு முன்பு முற்றுகை!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பல முறை மனு அளித்தும் சமூக வலைத்தளங்கள் மூலம் முதல்வரிடம் மனு அளித்தும் பயனில்லாததால் தற்போது முதல்வர் வீடு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர்கள் போராட்டம்:
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக 2012-ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளிலும் தையல், யோகா, இசை, ஓவியம் போன்ற கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கான 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அதற்காக ரூ.7700 ஊதியமும் வழங்கப்படுகிறது.
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையில் முறைகேடுகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்!!
8 வருடங்களாக ஒரே ஊதியம் வழங்குவதாக ஊதியத்தை உயர்த்தி தருமாறும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அவர்களுக்கு விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் வழங்கலாம் என்ற சலுகையை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய முதல்வரிடம் சமூக வலைத்தளம் மூலமாக கோரிக்கை வைத்தனர்.
ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – மருத்துவத் துறை இயக்கம் அறிவிப்பு!!
அவை அனைத்திற்கும் தமிழக அரசு செவி சாய்க்காத காரணத்தால் தற்போது திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சென்னை இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் ஆகியும் பணி ஆணை வழங்காத காரணத்தால் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதால் விரைவில் தமிழக அரசு இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்