சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையில் முறைகேடுகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்!!

0
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையில் முறைகேடுகள் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்!!
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையில் முறைகேடுகள் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்!!
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையில் முறைகேடுகள் இல்லை – பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்!!

சிறுபான்மையின கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளதால் இது குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி வரும் நிலையில் இதுவரை எந்த பள்ளியிலும் முறைகேடுகள் நடக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மையின கல்வி உதவித்தொகை திட்டம்:

சிறுபான்மையின பள்ளி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பள்ளிகளில் உள்ள சிறுபான்மையின மாணவர்களுக்கு அரசு சார்பாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்கள் பயிலும் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் சேகரித்து உதவித்தொகை பெறுவதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – மருத்துவத் துறை இயக்கம் அறிவிப்பு!!

அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு பயனர் எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு உதவித்தொகை பெற சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை தனியார் இணையதள மையங்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை !

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து பள்ளிகளிலும் இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்ட கூட்டத்தில் உத்தரவிட்டார். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிறுபான்மையின கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இதன் மூலம் பல பள்ளிகளில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார்கள். ஆனால் சில மாவட்டங்களில் இந்த உதவித்தொகை குறித்து முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கல்வித்துறை இயக்குனர் உத்தரவின்படி அனைத்து பள்ளிகளிலும் மறுஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை எந்த பள்ளியிலும் போலியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றதாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து தொகுப்பு விரைவில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!