இன்று முதல் பான் கார்டு ரத்து – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
இன்று முதல் பான் கார்டு ரத்து - அதிர்ச்சியில் பொதுமக்கள்!

பான் கார்டு குறித்தான மத்திய அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு தற்போது நெருக்கடியான நிலை எழுந்துள்ளது.

பான் கார்டு ரத்து:

மத்திய அரசு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாய ஆவணமாகியுள்ளது. அரசு மற்றும் எந்த விதமான பணிகளுக்கும் ஒரு தனி நபரின் விவரங்களை உறுதி செய்ய ஆதார் அட்டை அடிப்படையாக உள்ளது. எனவே ஆதார் அட்டையுடன் மக்கள் வங்கி கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை , அஞ்சலக எண், கேஸ் புக்கிங் எண் போன்ற அனைத்து வித ஆவணங்களையும் இணைக்க அறிவுறுத்தி வருகிறது. இதற்காக கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஆதார் அட்டையுடன் பான் கார்டை அனைவரும் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தது.

AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.29,760/- || நேர்காணல் மட்டுமே…!

இதற்காக பலமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் 2024 மார்ச் 31ஆம் தேதி இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்றுடன் ஆதார் உடன் பணத்தை இணைப்பதற்கு கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அவ்வாறு இணைக்காதவர்களின் பான் கார்டுகள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பணியை முடிக்காத பலரும் சிக்கலான நிலையில் உள்ளனர். பான் கார்டு இணைக்காத பட்சத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேலான பண பரிவர்த்தனைகளை எந் வகையிலும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!