போலீசில் சிக்கிய பாக்கியா, ராதிகா – யாரை காப்பாற்ற போகிறார் கோபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
போலீசில் சிக்கிய பாக்கியா, ராதிகா - யாரை காப்பாற்ற போகிறார் கோபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
போலீசில் சிக்கிய பாக்கியா, ராதிகா - யாரை காப்பாற்ற போகிறார் கோபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
போலீசில் சிக்கிய பாக்கியா, ராதிகா – யாரை காப்பாற்ற போகிறார் கோபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் அதிக வரவேற்பை பெற்று உள்ள சீரியல் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் பாக்கியாவும் ராதிகாவும் தற்போது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கின்றனர். இதில் யாரை கோபி காப்பாற்ற போகிறார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. மேலும் இது குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வக்கீலை பார்க்கச் சென்ற கோபி:

விஜய் டிவி சீரியல்களை பொறுத்தவரையில், ‘பாக்கியலட்சுமி’ தொடரில் வரும் கோபி, எப்போது தன்னுடைய மனைவி பாக்கியா மற்றும் ராதிகாவிடம் வசமாக சிக்கப் போகிறார் என்பதில் தான் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் உள்ளது. இந்நிலையில் பாக்கியா – கோபி – ராதிகா என மூவரும் இப்போது பிரச்சனையில் மாட்டியுள்ளனர். ஒரு பக்கம் மனைவி பாக்கியா, இன்னொரு பக்கம் காதலி ராதிகா என இருவரும் ஜெயிலில் இருக்கின்றனர். பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகள் சாப்பிட்டு, அவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் ஆகிவிட்டனர். அதனால் போலீஸ் ராதிகாவை தான் முதலில் தேடி வந்தனர். ஆனால் கோபி, சாப்பாட்டுக்கு பணம் கொடுத்தது தான் நாங்க, ஆனால் சமைத்துக் கொடுத்தவர் பாக்கியா தான் என போலீசாரிடம் கூறிவிடுகிறார்.

உணவில் விஷத்தை வைத்ததில் வேறொருவரை மாட்டிவிட்ட கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!

அதன் பின், பாக்கியாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பாக்கியா போலீஸ் ஸ்டேஷன் வருவதற்குள் கோபி சாமர்த்தியமாக அங்கிருந்து சென்று விட்டார். பாக்கியாவை போலீஸ் அரெஸ்ட் செய்த போது எழில் வீட்டில் இல்லை. இந்நிலையில், இன்றைய எபிசோடில் துடித்து போய் போலீஸ் ஸ்டேசனுக்கு எழில் வருகிறார். அம்மா நீ தைரியமா இரு என எழில் ஆறுதல் கூறுகிறார்.இனியா வீட்டில் அம்மாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். இங்கு போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகள் முறைப்படி விசாரிக்க, பாக்கியா கதறி அழுகிறார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்த எழில் நடந்தது என்ன என செல்வியிடம் விசாரிக்கிறார். பாக்கியா ராதிகாவிடம் போய் பேசுகிறார்.

கோவத்தில் வெண்பா மீது தண்ணீர் ஊற்றிய ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த எபிசோட்!

ஆனால் ராதிகா, பாக்கியா மீது கோபத்தில் இருப்பதால் அவரிடம் பேச மறுக்கிறார். அதற்குள் அம்மாவை தேடிவரும் எழில், போலீஸிடமும் பேசி பார்க்கிறார். ஆனால் மெடிக்கல் ரிப்போர்ட் வரும் வரை இவர்கள் ஸ்டேஷனில் தான் இருக்க வேண்டும் என காவல் அதிகாரி சொல்லிவிடுகிறார். மேலும் உண்மையை கண்டறிய எழில் ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடந்ததை விசாரிக்கிறார். இந்த பக்கம் கோபி ராதிகாவை ஜாமீனில் எடுக்க வக்கீலை சென்று பார்க்கிறார். செழியன், பாக்யாவுக்கு துணையாக போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்கிறார். பாக்கியாவின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என ஒட்டுமொத்த குடும்பமும் கவலையில் உள்ளனர். இந்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!