உணவில் விஷத்தை வைத்ததில் வேறொருவரை மாட்டிவிட்ட கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளும் மயங்கியதால் பாக்கியாவை போலீசார் கைது செய்தனர். கோபி தான் உணவில் விஷத்தைக் கலந்து போலீசிடம் மாட்டிக் கொள்வார் என எதிர்பார்த்த நேரத்தில் மற்றொரு திருடன் பிடிபட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு எப்போதுதான் கோபி குறித்தான அனைத்து உண்மைகளும் தெரிய போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது கூட 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு மயூவின் பிறந்தநாளுக்காக சமைத்து தரும்படி பாக்கியாவிடம் ராதிகா கேட்டிருந்தார். பாக்கியாவிடம் ராதிகா ஆர்டர் கொடுக்க வந்திருந்தபோது செல்வி ராதிகாவிடம் நீ திருமணம் செய்து கொள்ளப் போகும் உனது கணவரை மட்டும் எங்களது கண்ணில் காட்டவே இல்லை எனக் கூறுகிறார்.
துர்காவிற்கு வெண்பாவை திருமணம் செய்துவைக்க நினைக்கும் ஷர்மிளா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
உடனே ராதிகாவும் மொபைல் போனில் கோபியின் புகைப்படம் ஏதேனும் இருக்கிறதா என தேடுகிறார். ஆனால் கோபியின் புகைப்படம் எதுவும் மொபைல் போனில் இல்லாத காரணத்தினால் நான் உங்களுக்கு அவரை நேரிலேயே அறிமுகம் செய்து வைக்கிறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார். பாக்கியாவும் அந்த குழந்தைகளுக்காக ஆசையாக சமைக்கிறார். ஆனால் அந்த சாப்பாட்டை சாப்பிட்ட 100 குழந்தைகளுமே மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வளைகாப்பு விழாவில் நகைக்கடை பொம்மையாக ஜொலித்த ஆலியா – வைரலாகும் வீடியோ!
இதனால் சமைத்துக் கொடுத்த பாக்கியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆர்டர் கொடுத்தவரையும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக ராதிகா மற்றும் கோபியையும் காவல் நிலையத்திற்கு வரவேண்டுமென கூறியிருந்தார்கள். கோபி காவல் நிலையத்திற்கு வந்து விட்டால் கோபியை குறித்தான அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரிந்துவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நேரத்தில் உணவில் விஷத்தைக் கலந்ததாக மற்றொரு திருடன் பிடிபட்டு விட்டான். எப்போதுதான் பாக்கியாவிடம் கோபி மாட்டிக்கொள்ள போகிறாரோ என ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.