கண்ணனால் ஜெயிலுக்கு போகும் கதிர்.. அதிர்ச்சியில் குடும்பம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ப்ரோமோ!

0
கண்ணனால் ஜெயிலுக்கு போகும் கதிர்.. அதிர்ச்சியில் குடும்பம் -
கண்ணனால் ஜெயிலுக்கு போகும் கதிர்.. அதிர்ச்சியில் குடும்பம் - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் ப்ரோமோ!
கண்ணனால் ஜெயிலுக்கு போகும் கதிர்.. அதிர்ச்சியில் குடும்பம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ப்ரோமோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணனுக்காக வங்கி ஊழியர்களிடம் நியாயம் கேட்க சென்ற கதிரை போலீசார் கைது செய்கின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு வெளியே சென்று தனியாக வாழ்ந்து காட்டுவோம் என சவால் விடுகின்றனர். ஆனால் அதை காப்பாற்றுவது போல வாழாமல் ஆடம்பரமாக செலவு செய்து கடனில் சிக்கி கொள்கின்றனர். அது மட்டுமில்லாமல் கிரெடிட் கார்டு அப்ளை செய்து நகை, ட்ரெஸ் என அனைத்தும் வாங்க அந்த கடனையும் கட்ட முடியாமல் போகிறது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பல முறை அவகாசம் கொடுத்ததும் கண்ணனால் பணத்தை கட்ட முடியவில்லை.

அதனால் கண்ணன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தவர்கள் மிரட்டுகின்றனர். உடனே கண்ணன் பணத்தை கொடுத்துவிடுவதாக சொல்ல, பணம் கொடுக்காமல் இருந்தால் உன் மனைவியை கொடு என அந்த வங்கி ஊழியர் பேசுகிறார். உடனே கோவப்பட்ட கண்ணன் அவர்களை அடித்துவிட, ஐஸ்வர்யாவை மீனா பிடித்து தடுக்கிறார். இந்நிலையில் கண்ணன் கதிரிடம் சொல்ல, கதிர் அந்த வங்கி ஊழியரை அடித்துவிடுகிறார். அதனால் வங்கி ஊழியர்கள் போலீசில் கதிர் மீது புகார் அளிக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

பின் வீட்டிற்கு போலீஸ் வந்து கதிர் எங்கே என கேட்க, முல்லை அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். வங்கி ஊழியர்களை அடித்ததால் உங்களை கைது செய்கிறோம் என போலீசார் கதிரை இழுத்து செல்ல, தனம் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், கதிரை சிக்கலில் இருந்து மூர்த்தி காப்பாற்றுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!